இந்தியா- சீனா இடையே 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை

இந்தியா- சீனா இடையே 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை

இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

கொவிட் தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது.

இதனையடுத்து, இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பமாகும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் ஆரம்பமானது.

இந்நிலையில், இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை 05 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஷாங்காய்-டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று முதல் தொடங்குகிறது.

Share This