புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்காக இந்திய நிறுவனங்களிடம் விலைமனு கோரல்

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்காக இந்திய நிறுவனங்களிடம் விலைமனு கோரல்

இலங்கையில் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்குவதற்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து விலை மனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் நான்கு மாத காலத்திற்குள் நிறைவடையும் என துணை அமைச்சர் எரங்க வீரரத்ன
தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு நிதியளிப்பதற்காக இந்தியா 10.4 பில்லியன் ரூபாவை மானியமாக வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This