கொளத்​தூர் தொகு​தி​யில் 4,379 போலி வாக்​காளர்​கள் – தமிழக முதல்வரின் வெற்றி குறித்து நிர்மலா சீதாராமன் கேள்வி

கொளத்​தூர் தொகு​தி​யில் 4,379 போலி வாக்​காளர்​கள் –  தமிழக முதல்வரின் வெற்றி குறித்து  நிர்மலா சீதாராமன் கேள்வி

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளதாக மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார்.

அவர்​கள் வாக்களித்துதான் ஸ்டா​லின் வெற்றி பெற்றாரா என்​றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

கோவை​யில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக கோவை கோட்ட அணி பிரி​வு​கள், மாநில மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் கூட்​டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜிஎஸ்டி வரி மாற்​றம் செய்​யப்​பட்​ட​தால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைந்​துள்​ளது. தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பின் சார்​பில் நடத்​தப்​படும் பாராட்டு விழா​வில் கலந்து கொள்ள கோவை வந்​துள்​ளேன்.

தமிழ்​நாடு முழு​வதும் ‘எஸ்​ஐஆர்’ பணி​களுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திமுக போராட்​டம் நடத்​து​வது ஆச்​சரி​யம் அளிக்​கிறது. இந்த ​நட​வடிக்​கையை பாஜக கொண்டு வந்​தது போல் திமுக ​வினர் பேசுகின்​ற​னர்.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 13 முறை ‘எஸ்​ஐஆர்’ நடை​பெற்​றுள்​ளது. அப்​போது காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் இருந்த திமுக எது​வும் செய்​யாமல், தற்​போது மட்​டும் ஏன் போராட்​டம் நடத்​துகிறது.

முதல்​வர் ஸ்டா​லின் என்ன சொல்​கி​றோம் என புரி​யாமல் காணொளி வெளி​யிட்​டுள்​ளார். துணை முதல்​வர் உதயநிதி ‘எஸ்​ஐஆர்’ என்​றால் என்னவென்று தெரி​யாமல் ‘ரி​விஷன் ‘என்​பதை ‘ரெஸ்ட்​ரிக் ஷன்’ என கூறுகிறார்.

தங்​களின் ஆட்​சி​யின் தோல்வி​களை மறைக்க திமுக இது போன்ற நிலைப்​பாட்டை எடுத்து வரு​கிறது. எதிர்க்​கட்​சிகளோ, பாஜகவோ வெற்றி பெற்​றால் ‘இவிஎம்’ இயந்​திரங்​கள் மீது குற்​றம்சாட்​டு​கின்​ற​னர்.

திமுக வெற்றி பெறும் போது எது​வும் எதிர்த்து பேசுவ​தில்​லை. பிஹாரில் தேர்​தல் நடை​பெறும் நிலை​யில், ராகுல் காந்தி ஹரி​யா​னா​வில் வாக்கு திருட்டு நடந்​துள்​ளது என பேசுகி​றார். தமிழ்​நாட்​டில் கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர்.

ஒரே பெயர், ஒரே சொந்​தக்​காரர்​கள் பெயர், ஒரே வயது. இருப்​பினும் அட்டை எண்​கள் மட்​டும் வேறு. 933 வாக்​காளர்​கள் போலி முகவரி​யில் உள்​ளனர். இது​போன்ற முறை​கேடு​களை நீக்க வேண்​டா​மா. கொளத்​தூர் தொகு​தி​யில் இத்​தகைய முறை​கேடு​களால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்​றாரா என நாங்​கள் கேட்​கலா​மா.

தற்​போது கண்​டறியப்​பட்​டுள்ள முறை​கேடு​களை நீக்க வேண்​டா​மா. பிஹாரில் 22 லட்​சம் வாக்​காளர்​கள் உயிரிழந்தவர்கள். இருப்​பினும் வாக்​காளர் பட்​டிய​லில் இடம்​பெற்​றுள்​ளனர். 7 லட்​சம் வாக்​காளர்​கள் ஒரு இடத்​தில் மட்​டுமின்றி மேலும் வேறு இடத்​தி​லும் பெயர் பதிவு செய்​துள்​ளனர். 35 லட்​சம் பேர் நிரந்​தர​மாக பிஹாரை விட்டு வெளி​யேறி விட்​டோம் என கூறி​யுள்​ளனர்.

பிஹாரில் மட்​டும் 64 லட்​சம் பேரின் பெயர் வாக்​காளர் பட்​டியலில் இருக்க கூடாது. அதற்கு தான் தேர்​தல் ஆணை​யம் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இரண்​டாவது கட்​ட​மாக தேர்​தல் ஆணை​யம் 9 மாநிலங்​கள் மற்​றும் 3 யூனியன் பிரதேசங்​களில் ‘எஸ்​ஐஆர்’ பணி​களை மேற்​கொள்ள உள்​ளது. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​தி​லும் தேர்​தல் ஆணை​யத்​திற்கு இந்த அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் மீது அமெரிக்க ஜனாதிபதி 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்து 3 மாதங்​கள் கடந்த நிலை​யில் சலுகை திட்​டங்​கள் அறி​விப்​பது தொடர்​பாக தொழில்​துறை​யினருடன் கலுந்துரையாடி வருகிறோம். விரை​வில் அறி​விப்பு வெளி​யிடப்​படும்.” என்றார்.

Share This