2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக 228,450 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 68,132 பேர் ‘ஐஸ்’ போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் 832.3 கிலோகிராம் (கிலோ) ஹெராயின், 8,359 கிலோ கஞ்சா மற்றும் 1,364 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் 598 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 சந்தேக நபர்களையும், நிலுவையில் உள்ள பிடியாணையுடன் கூடிய 418 சந்தேக நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அறிக்கையின்படி, குடிபோதையில் வாகனம் செலுத்திய 45 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 16 பொறுப்பற்ற சாரதிகள் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,857 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Share This