கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டத் திகதி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டத் திகதி அறிவிப்பு

கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டம் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை ஆணையர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் ஜூன் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகர மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில், புதிய மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பது முதல் பணியாக இருக்கும்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, கொழும்பு மாநகரை சபையில் எந்தக் கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

 

Share This