சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை பலி

யாழில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை டீசலை போத்தலொன்றில் அடைத்து வைத்துள்ளார்.

இதன்போது சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை மயக்கமுற்றதைத் தொடர்ந்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

 

Share This