Category: Uncategorized

அவுஸ்ரேலியாவை அடுத்து இலங்கையையும் வீழ்த்தியது சிம்பாப்வே

Nishanthan Subramaniyam- February 19, 2026

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், ... Read More

எஸ்.ஜெய்சங்கர் – டில்வின் சில்வா இடையில் சந்திப்பு ; இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாக இந்தியா உறுதி

Nishanthan Subramaniyam- February 7, 2026

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் ... Read More

கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவு

Nishanthan Subramaniyam- January 29, 2026

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர ... Read More

நுவரெலியாவில் ஆகக்குறைந்த வெப்பநிலை பதிவு

Nishanthan Subramaniyam- January 22, 2026

நுவரெலியாவில் இன்று (22) மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை இவ்வாறு பதிவாகியுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, பண்டாரவளையில் 11.5 பாகை செல்சியஸ், பதுளையில் 15.1 ... Read More

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

Nishanthan Subramaniyam- January 20, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித ... Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம் – எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை

Nishanthan Subramaniyam- January 9, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள போதிலும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 2025-2026 காலபோக நெற்ச்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடுக்குளம் மற்றும் ... Read More

குவாட் நாடுகளின் தூதுவர்கள் சீனாவில் மந்திராலோசனை

Nishanthan Subramaniyam- January 1, 2026

சீனாவிலுள்ள குவாட் நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ... Read More

டக்ளஸ் தேவாநந்தா வைத்தியசாலையில் அனுமதி

Nishanthan Subramaniyam- December 30, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More

இது மக்களுக்கான தருணம் – அரசியலுக்கானதல்ல

Nishanthan Subramaniyam- December 13, 2025

பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரைக் கோரி நாடாளுமன்றத்தைக் கூட்ட எடுத்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ... Read More

என்.மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

Mano Shangar- December 5, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக என்.  மொஹமட் தாஹிர் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ... Read More

அரசாங்கத்தின் ஊடகத் தேசிய கொள்கையில் குறைபாடுகள் – ஏற்க முடியாதென்கிறது யாழ். ஊடக அமையம்

Nixon- November 26, 2025

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க ... Read More

அம்பிட்டிய தேரரின் இனவாத கருத்து – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Nishanthan Subramaniyam- November 25, 2025

அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ICCPR சட்டத்தின் கீழ் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே 2023/10/23 அன்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ... Read More