Category: முக்கிய செய்திகள்

கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் ... Read More

வத்தளையில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Diluksha- December 15, 2025

வத்தளையில் சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக்கில் ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். ... Read More

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்

Mano Shangar- December 15, 2025

பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் ... Read More

நாளை முதல் மழை தீவிரமடையும் – மண் சரிவு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

Mano Shangar- December 15, 2025

மழையுடன் கூடிய காலநிலை நீடித்துள்ள நிலையில் மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், ... Read More

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது

Diluksha- December 15, 2025

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் சேதமடைந்த நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று (15) மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்த  மண் தற்போது அகற்றப்பட்டுள்ளது. ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. சிட்னியில் ... Read More

விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Diluksha- December 14, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 02 ... Read More

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு

Diluksha- December 14, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற வானிலை காரணமாக 391,401 ... Read More

“அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்திய மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம்”

Nishanthan Subramaniyam- December 13, 2025

“அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ... Read More

புற்றுநோயிலிருந்து மீண்டுவரும் மன்னர் சார்லஸ்

Nishanthan Subramaniyam- December 13, 2025

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு ... Read More

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை

Nishanthan Subramaniyam- December 13, 2025

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் ... Read More