Category: இலங்கை
ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை நிறுத்தம்
ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதால், சேவைகள் நிறுத்தப்படுவதாக என ஆட்கள் பதிவுத் திணைக்களம் இன்று ... Read More
உக்ரைன் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட இலங்கை வீரர் போரில் உயிரிழந்தார்
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியால் “வீர சிப்பாய் பதக்கம்” வழங்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் இரண்டாவது கமாண்டோ படைப்பிரிவின் உயரடுக்கு பாதுகாப்புப் ... Read More
கட்டுநாயக்கவில் 15 சீனர்கள் கைது – ரூ. 3.5 கோடி பெறுமதியான போன்கள், சிகரெட்டுகள் கடத்தல்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோதமாகப் பொருட்களைக் கடத்தி வர முயன்ற 15 சீனப் பிரஜைகள் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கப் பணிப்பாளரும் ... Read More
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமா?
புத்தாண்டு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ... Read More
யாழ்ப்பாணத்தின் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை விளக்கும் நூல் வெளியீடு
யாழ்ப்பாணத்தின் சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஆரம்பகால வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் புதிய நூலை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்ததன் மூலம் மிக நீண்டகாலத்துக்கு முன்னரான சமூகம் ... Read More
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசுகின்றனர் – சிறீதரன்
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
மத்திய கிழக்கு போர் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் ... Read More
வடக்கு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த ஆளுநர் உத்தரவு
தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. நிர்மாணப் ... Read More
வரி, வாழ்க்கைச் செலவு உயர்வால் வாடும் இலங்கையர்கள் – மீண்டும் வரி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள்
இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் பிரதானமானவையாக வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை எதிர்கொண்டுவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், ... Read More
கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து
சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாண ... Read More
ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா
புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று ... Read More
119 தொலைபேசி சேவையில் தாமதம் – சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்
இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார். ... Read More












