முன்னாள் அமைச்சர் ராஜித உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித  உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மீள விசாரிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளதால் அதற்கென தினமொன்றை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். இதற்கமைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த போது முகத்துவாரம் மீனவ துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றிற்கு குத்தகைக்கு வழங்கியதில் அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Share This