ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள்
காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, பின்னர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நுகேகொடை பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This