துசித ஹல்லொலுவவுக்குப் பிணை

துசித ஹல்லொலுவவுக்குப் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், அவருக்கு பயணத் தடையும் விதித்துள்ளது.

தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசாங்க சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )