
போர் தொடர்பில் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தல்
ஈரானில் இடம்பெறும் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தற்போது நிலவும் பதற்றம் தணிக்கப்படுவதை காண விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோரிக்கையொன்றைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்க அவுஸ்திரேலியா விமானங்களை அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவும் வகையில் கடற்படைகளை அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா மறுத்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
