உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்

உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசிப்பதனூடாக விண்ணப்பிக்க முடியும்.

2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசம் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

 

Share This