மற்றுமொரு படகு கவிழ்ந்து விபத்து – மீனவர்கள் இருவர் மாயம்

மற்றுமொரு படகு கவிழ்ந்து விபத்து – மீனவர்கள் இருவர் மாயம்

தங்காலையில் உள்ள பரவிவெல்ல துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர்.

விபத்தின் போது, மீன்பிடி படகில் 06 மீனவர்கள் இருந்துள்ளனர், அவர்களில் நால்வர் உயிர் தப்பிய நிலையில் இரண்டு மீனவர்கள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிர் தப்பிய மீனவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க புறப்பட்ட ‘மாக்சிம் புத்தா 01’ என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் மீன்பிடித்துவிட்டு மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், பாறையில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This