அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு

கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே நேற்று மாலை 6:00 மணியளவில் கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.
நண்பர்களுடன் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.
இறப்புக்காரணம் இதுவரை அறியப்படவில்லை, சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.