இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் சாலை விபத்துகள் – முதல் ஐந்து மாதங்களில் 965 பேர் பலி

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் சாலை விபத்துகள் – முதல் ஐந்து மாதங்களில் 965 பேர் பலி

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற சாலை விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 1,842 பாரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 902 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸாரின் கூற்றுப்படி, அலட்சியம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாகும்.

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்க நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் சாரதிகளுக்கு விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

Share This