அனைத்துப் பிரச்சினைகளையும்  தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கும் எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் .

தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பயிற்சிக்கு பிந்தைய வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்  இந்த நியமனங்களுக்காக 453 வைத்தியர்களில் 435 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார் .

தற்போது இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் இந்த வைத்தியர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ   மேலும் தெரிவித்துள்ளார் .

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )