இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் தொடர்பில் சில நாள்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன் எனவும்
இந்தியாவின் விரைவான ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் .

நேற்று 38,ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )