இலங்கை – பூட்டான் இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய இணக்கம்

இலங்கை – பூட்டான் இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய இணக்கம்

இலங்கை மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.

பூட்டான் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கின்லி வாங்சுக் (Kinley Wangchuk), இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை (Capt. Daminda Rambukwella) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச பயணிகள் போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் பூட்டான் மாணவர்களுக்கு இலங்கையில் விமான ஓட்டுநர் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச விமான போக்குவரத்துத் துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்துக் கலந்துரையாடிய இரு தரப்பினரும், முறையான வான்வழிச் சேவை ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )