சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை

சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை

இலங்கையின் சுகாதார சேவையில் போதுமான தாதியர்கள்  இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த  ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று  நடைபெற்ற நிகழ்வின்  போது அமைச்சர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது 43 ஆயிரத்து 553  தாதியர்கள்  பணியாற்றி வருகின்றனர்.எனினும், இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30%  இருக்கின்ற போதிலும், சுகாதார சேவைக்குத் தேவையான தாதியர்களின்  எண்ணிக்கை இதுவரை முழுமையடையவில்லை என அமைச்சர்  நளிந்த  ஜயதிஸ்ஸ  குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நாட்டுக்கு இன்னும் பெருமளவிலான தாதியர்கள்  தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தாதியர்  சேவைக்கான ஆட்சேர்ப்பின் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ   மேலும்  தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )