சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்

சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்

 

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதில் 73 T56 துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள் மற்றும் 2,126 பிற துப்பாக்கிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், 1,793 கிலோகிராம் 139 கிராம் ஹெராயின், 3,683 கிலோகிராம் 163 கிராம் ஐஸ் மற்றும் 16,686 கிலோகிராம் 62 கிராம் கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், 37 கிலோ 899 கிராம் கோகைன் மற்றும் 746 கிலோ 673 கிராம் ஹாஷிஷையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஜனவரி முதலாம் திகதி முதல் பொலிஸாரால் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 790,461 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 6,641 பேரையும், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 73,634 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், 48,345 நபர்களுக்கு திறந்த வாரண்டுகளை நிறைவேற்ற முடிந்ததாக பொலிஸ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )