மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை

வடக்கு அயர்லாந்தில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட காத்திருப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நார்தர்ன் டிரஸ்ட்டை தளமாகக் கொண்ட நாட்டிங் ஹில் மருத்துவ பயிற்சி மையத்தில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 32 பெண்கள் சிவப்புக் கொடி பரிந்துரையுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சிவப்புக் கொடி பரிந்துரை பெற்றவர்கள் மிகவும் அவசரமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதுடன் மருத்துவர்கள் முன்னுரிமை அளிக்கும் குழுவிலும் உள்ளனர்.

மூன்று பெண்கள், தங்கள் அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி, ஒரு ஆலோசகரை சந்திக்க 8 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஒன்பது பேர் இன்னும் காத்திருக்கின்றனர், ஒருவர் 10 வாரத்திற்கு மேல் காத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நோயாளர் ஒருவர் தனியார் நிறுவனத்துக்கு பணம் செலுத்தி, சிகிச்சைக்கு காத்திருப்பதாகவும், தாமதத்தால் மன ரீதியிலும் உடல் ரீதியிலும் அழுத்தத்தை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Share This