நாட்டில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் – அமைச்சர் ஆனந்த விஜேபால

நாட்டில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் – அமைச்சர் ஆனந்த விஜேபால

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் பொதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முழு நாடும் ஒன்றாக என்ற போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளோம்.
அதில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த நாட்டிற்கான போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை சீர்குலைத்ததற்காக, அதாவது நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுத்ததற்காக, முப்படையினருக்கு, குறிப்பாக கடற்படைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும், பொலிஸாரின் சிறப்புப் பணிக்குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக பங்களித்து வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் கடத்தலின் விளைவாக, நாங்கள் கிராம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், கிலோகிராம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த போதைப்பொருட்கள் இப்போது தீவிரமாகப் பறிமுதல் செய்யப்படுகின்றன.

மேலும், கடல் வழியாக இந்த நாட்டிற்கு போதைப்பொருள் வழங்கப்படும் அனைத்து செயற்பாடுகளிலும் கடற்படை தீவிரமாக பங்கேற்று, போதைப்பொருட்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றார்.

Share This