விவசாயிகளின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

விவசாயிகளின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

விவசாயிகளின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு 871,425 விவசாயிகள் பங்களிப்பு செய்துள்ளனர்.

இவர்களில் 178,927 விவசாயிகள் தபால் நிலையங்கள் மூலம் தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும்.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் ஓய்வூதிய நிதியில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அதற்குப் பங்களித்த விவசாயிகளிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் செயன்முறையும் தடைபட்டது.

இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு விவசாய சமூகத்தினரிடமிருந்து வந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் முதல் விவசாயிகளுக்கு மாதாந்திர விவசாய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )