முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாளர் ஒருவரிடம் வினவியபோது, ​​முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகளைக் குறைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்தது. அதன்படி இந்த வசதிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This