இந்த வருடத்தில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

ஊடகவிலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தூண்டுதலால் நடந்தவை.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 41 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 27 பிஸ்டல் வகை துப்பாக்கிகள். மீதமுள்ள 14 துப்பாக்கிகள் , டி-56 ரக துப்பாக்கிகள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share This