காலியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 24 பேர் கைது

காலியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 24 பேர் கைது

காலியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாமோதர பகுதியில் 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் போக்குவரத்தை தடுக்கும் நோக்கில் இந்த விசேட சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

CATEGORIES
TAGS
Share This