ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்த விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த மீனவர்களை மன்னார் மீன்வளத்தறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

கைதான மீனவர்களை மீட்கக் கோரி அரசுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share This