முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விபத்துகளுக்கு வழிவகுப்பதாக இலங்கை பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினர், செல்லுபடியாகும் இலங்கை ஓட்டுநர் உரிமம், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமம் அல்லது சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு மாற்றப்பட்ட வெளிநாட்டு உரிமம் வைத்திருக்க வேண்டும்.

இதன்படி, சர்வதேச ஓட்டுநர் அனுமதிகள் மற்றும் மாற்றப்பட்ட உரிமங்கள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு அவர்களை அங்கீகரிக்கவில்லை. உரிமம் இல்லாத நபர்களை வாகனம் செலுத்துவதற்கு அனுமதித்தால் 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கின்றனர்.

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விடுவதற்கு முன்பு வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான வணிகங்கள் உரிமங்களை சரிபார்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This