மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்

மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பத்தண்டுவன பகுதியில் இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்ந அடையாளம் தெரியாத இருவர் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது காயமடைந்த 36 வயதுடைய நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This