குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது

குச்சவெளி பிரதேச சபை தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனியா பிள்ளை முபாரக் மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம்.இர்ஷாட் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காணி உரிமத்தை வழங்குவதற்காக பெண்ணொருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த போதே அவர்கள் கைதாகியுள்ளனர்.
20 பேர்ச்சஸிற்கான காணி உரிமத்தை வழங்குவதற்காக குறித்த பெண்ணிடமிருந்து ஏற்கனவே பிரதேச சபை தவிசாளர் 160,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
எனினும் மேலதிகமாக 5 இலட்சம் ரூபாவை தனக்கு வழங்க வேண்டுமென அவர் குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
கைதான அவர் திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
