
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி
அமெரிக்காவில் அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான 02 பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
