பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை (CID) சந்தேக நபரை கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் விளக்கமறியல் உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This