வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், பேசுகையில்,
“எனக்கு ஜப்பானிய கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. 14 லட்சத்துக்கு ஒரு விட்ஸ் வாங்க முடியும் என்று யார் சொன்னது?
டொயோட்டா ரேய்ஸ் 122 லட்சமும், யாரிஸ் 185 லட்சமும், ப்ரியஸ் 289 லட்சம் என தற்போது விலை உயர்ந்துள்ளது. இங்கே தான் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தனது வரவு-செலவுத் திட்ட உரையில் பெரும்பாலான வரி வருவாயை வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.
ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? “இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.