
ஈரானின் அணுசக்தி திறன்கள் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது தாக்குதல்களைத் தொடர்கின்றன.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், குறைந்தளவிலான தீப்பரவல் மற்றும் சிறியளவான சேதம் ஏற்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கும் என் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை அழிக்க வொஷிங்டன் தேவையான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஈரான் வளைகுடா முழுவதும் எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்கியுள்ளதால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
கட்டாரின் அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் அதன் இரண்டு வசதிகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியையும் நிறுத்தி வைத்துள்ளது.
உலகின் எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி இப்போது “மூடப்பட்டுள்ளது” என ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
மேலும் நீர்வழி வழியாக செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பல்களும் தாக்கப்படும் என்றும் எச்சரிக்கிறது.
இஸ்ரேல் முழுவதும் உள்ள தளங்களை ஈரான் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஜெருசலேம், டெல் அவிவ் மற்றும் ஈலாட் மீது ஏவுகணை இடைமறிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை முதல் தற்போது வரை இஸ்ரேலில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
