இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது

இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது.

பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்டு ஒக்​டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீமு தீவிர​வாத தாக்​குதல் நடத்​தினர்.

இந்த தாக்​குதலில் 1,139 இஸ்​ரேலியர்​கள் கொல்​லப்​பட்​டதுடன், இஸ்​ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதி​களாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்​திச் சென்​றது.

இதையடுத்​து, ஹமாஸ் ஆயுதக்​குழு மீது போர் அறி​வித்த இஸ்​ரேல், காசா முனை​யில் அதிரடி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000க்​கும் அதி​க​மான பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் காசா​வில் போரை நிறுத்​து​வதற்​கான ஒப்​பந்​தத்தை இறுதி செய்​யும் முயற்​சி​யில் அமெரிக்கா ஈடு​பட்டு உள்​ளது.

ஹமாஸிட​மிருந்து பிணைக் கைதி​களை மீட்டு போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வோம் என்று வெள்ளை மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்​ளிக்​கிழமை தெரி​வித்​தார்.

மேலும், ஹமாஸ் பிணைக் கைதி​களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு​வை​வும் அமெரிக்கா விதித்​துள்​ளது. அத்துடன், இஸ்​ரேல், பாலஸ்​தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்​தை​யும் அமெரிக்கா தற்​போது அறி​வித்​துள்​ளது.

இரு தரப்​பும் இந்​தத் திட்​டத்தை ஒப்​புக்​கொண்​டால், உடனடி​யாக மோதல்​கள் நிறுத்​தப்​படும். இஸ்​ரேல் தனது நடவடிக்​கைகளை நிறுத்​தி, காசா​விலிருந்து படிப்​படி​யாக வெளி​யேறத் தொடங்​கும்.

பாலஸ்​தீனர்​களை கொண்ட ஒரு குழு​வைக் கொண்டு காசா​வில் இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். அந்த அமைப்பே காசா​வில் அன்றாட நிர்​வாகத்​தைக் கவனிக்​கும்.

அமெரிக்​கா​வின் தலை​மை​யில் அரபு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களைக் கொண்ட ஒரு புதிய சர்​வ​தேச குழு இதைக் கண்​காணிக்​கும்.

பாலஸ்​தீனிய ஆணை​யம் தனது சீர்​திருத்​தத் திட்​டத்தை முடிக்​கும் வரை காசா​வின் மறுசீரமைப்​புக்கு நிதி திரட்​டு​வது இக்​குழு​வின் பணியாகும்.

இந்​தத் திட்​டத்​துக்கு இஸ்​ரேல் சம்​மதம் தெரி​வித்த 48 மணி நேரத்​துக்​குள், உயிருடன் உள்ள மற்​றும் இறந்த அனைத்​துப் பிணைக் கைதி​களும் இஸ்​ரேல் வசம் ஒப்​படைக்​கப்​படு​வார்​கள்.

போர் உடனடி​யாக நிறுத்​தப்​படும் போன்ற அம்​சங்​கள் இந்தப்பட்டியலில் இடம்​பெற்​றுள்​ளன. இதேவேளை, பாலஸ்​தீனத்தை தனி நாடாக அங்​கீகரிக்க பிரித்தானியா உள்​ளிட்ட நாடு​கள் முடிவு செய்​துள்​ளமை குறிப்பிடத்தக்கது.

Share This