450 ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்

450 ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்

450 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் 450 கிலோ ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் பணியகம் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் பதினொரு மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தெய்வேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு படகுகளும் தற்போது திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Share This