
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 366 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
இதேவேளை போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று விமான நிலைய வருகைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான பெண் அங்கொடையைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்பதுடன் கைது செய்யப்பட்ட நபர் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 31 வயதுடையவர்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இலங்கை
