கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்

துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது.

சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர்.

கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​கப்பல் குழுவினர் நாட்டின் முக்கியமான இடங்களைப் பார்வையிடுவார்கள்.

இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும்
அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

TCG BÜYÜKADA கப்பல் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This