ஜூன் மாதத்தில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மாத்திரம் 27,504 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்திலிருந்து 7,716 பேரும், சீனாவிலிருந்து 6,097 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.
அத்துடன் பங்களாதேஷிலிருந்து 5,035 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 4,594 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டி்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,123,289 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 231,564 பேர் இந்தியாவிலிருந்தும், 111,940 பேர் ரஷ்யாவிலிருந்தும், 103,990 பேர் இங்கிலாந்திலிருந்தும் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.