தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

தமிழ்நாட்டின் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் அடுத்த 01 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அந்நாட்டு வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் 1 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Share This