
இந்திய மீனவர்கள் மூவர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
