இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன.
சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அங்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகின்றன. இது இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு மைதானம் மட்டுமே இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது என்று பலர் வாதிட்டனர்.
இந்த விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
“ஒவ்வொரு முறையும் ஆடுகளம் வெவ்வேறு சவால்களை முன்வைக்கிறது.” நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஆடுகளம் வித்தியாசமாக இருந்துள்ளது.
இது எங்கள் சொந்த மைதானம் அல்ல. நாங்கள் இங்கு அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்த ஆடுகளம் எங்களுக்கும் புதியது.
ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பந்து வீச்சாளர்கள் தங்கள் பந்துகளை சீம் செய்ததையும், பந்துவீசும்போது அவற்றை சிறிது ஸ்விங் செய்ததையும் காண முடிந்தது.
முதல் இரண்டு போட்டிகளில் எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்து வீசியபோது இது அப்படி இல்லை. “முதல் சுற்று போட்டிகளில் நாங்கள் அதிக சுழலைக் காணவில்லை, ஆனால் மூன்றாது போட்டியில் அவ்வாறு இல்லை” என்று ரோகித் கூறினார்.
துபாயில் தமக்கு மூன்று அல்லது நான்கு பிட்சுகள் இருப்பதாகவும், எங்கு விளையாடுவோம் என்பது தனக்குத் தெரியாது என்றும் ரோகித் கூறுகிறார். “இங்கே நான்கு அல்லது ஐந்து பிட்சுகள் உள்ளன.”
அரையிறுதியில் எந்த மைதானத்தில் விளையாடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் என்ன நடந்தாலும், நாங்கள் அதற்கு ஏற்ப மாறி அதற்கேற்ப விளையாடுவோம்” என்று ரோகித் சுட்டிக்காட்டினார்.
இன்று (மார்ச் 4) பிற்பகல் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது. இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.