வாகன இறக்குமதிக்கு தடையில்லை – ஜனாதிபதி உறுதியளித்தார்

வாகன இறக்குமதிக்கு தடையில்லை – ஜனாதிபதி உறுதியளித்தார்

நாட்டில் வாகன இறக்குமதி இடையூறு இல்லாமல் தொடரும் என்றும், எனவே இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சமீபத்திய வதந்திகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்ற கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த ஆண்டு நீங்கள் ஒன்றை வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு நீங்கள் ஒன்றை வாங்கலாம் – எதுவும் மாறாது” என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், தற்போதுள்ள கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று பொதுமக்களுக்கு உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை தவறாக வழிநடத்தவும் தேவையற்ற பீதியை ஏற்படுத்தவும் சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

Share This