தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சி

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சி

தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 78,000 ரூபா ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் பெறுமதி உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் பெறுமதி சரிந்து வரு​வ​தால், பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர்.

இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதிகரித்து வரு​கிறது. இதன் காரண​மாக, தங்​கத்​தின் விலை​யும் அதி​கரித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாத தொடக்​கத்​தில் ஒரு பவுன் தங்​கம் 58 ஆயிர​ம் ரூபாவாக காணப்பட்டது

பின்​னர், போர் பதற்​றம் உள்ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்வடைந்து ஒகஸ்ட் மாதம் எட்டாம் திகதி
ஒரு பவுன் தங்​கம் 75,760 ரூபா என்ற உச்​சத்தை அடைந்​தது.

பின்​னர், ஏற்ற, இறக்​க​மாக இருந்த நிலை​யில், தங்​கத்​தின் விலை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் தமிழகத்தில் தொடர்ச்​சி​யாக அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.

 

Share This