தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சி

தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 78,000 ரூபா ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி சரிந்து வருவதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் 58 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது
பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து ஒகஸ்ட் மாதம் எட்டாம் திகதி
ஒரு பவுன் தங்கம் 75,760 ரூபா என்ற உச்சத்தை அடைந்தது.
பின்னர், ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.