டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் 20,519 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,030 டெங்கு நோயாளரகள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.