தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்

தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்

கடந்த மாதம் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு அதற்குள் இருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்களின் பொலிஸ் காவல் நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவ் வழக்கை விசாாரணை செய்த நீதிபதி, குறித்த 14 மீனவர்களுக்கு இலங்கைப் பணத்தில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் படகை செலுத்திய ஓட்டுநருக்கு இலங்கைப் பணத்தில் 2 கோடி அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இந்திய பண மதிப்பின்படி மொத்த அபராதத் தொகை ரூபாய் 60 இலட்சத்து 48 ஆயிரம் ஆகும்.

Share This