எம்.ஏ.சுமந்திரன் – கஜேந்திரகுமார் இடையே நாளை பேச்சுவார்த்தை: சிவாஜிலிங்கம் தகவல்

உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
”உள்ளூர் ஆட்சி தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் முழு சபைகளினதும் பெயர் பட்டியல்கள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. அனைத்து உறுப்பினர்களினதும் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் ஜூன் மாதம் 2ஆம் திகதியில் இருந்து 4 ஆண்டுகளுக்கான பதவிக் காலம் ஆரம்பிக்கும்.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் .” என்றார்.