Tag: #oruvan #news

டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு

Mano Shangar- December 2, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பேசியுள்ளார். இன்று ... Read More

இலங்கையை நிலைகுலையச் செய்த பேரிடர் – 400ஐ அண்மிக்கும் உயிரிழப்பு

Mano Shangar- December 2, 2025

டித்வா புயல் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 382,651 குடும்பங்களைச் ... Read More

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி ஆதரவு

Mano Shangar- December 2, 2025

இலங்கை முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பரவலான அழிவுகளைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு தனது கடிதம் எழுதியுள்ளார். இந்த ... Read More

இலங்கைக்கு உதவி – பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி

Mano Shangar- December 2, 2025

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு, இந்திய வான்வெளியை பயன்படுத்த, விரைவான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் ... Read More

களனி ஆற்றின் நீர்மட்டம் குறைகிறது – பல பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கவில்லை

Mano Shangar- December 2, 2025

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், களு கங்கை, மல்வத்து ... Read More

வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும்

Mano Shangar- December 2, 2025

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய ... Read More

மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு

Mano Shangar- December 1, 2025

இயற்கை பேரிடர் காரணமாக வென்னப்புவ - ஜின் ஓயாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகாப்டரின் தலைமை விமானி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தலைமை விமானி, விண்ட் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய ... Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

Mano Shangar- November 30, 2025

ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும்  ... Read More

பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை

Mano Shangar- November 30, 2025

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 273,606 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More

இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு

Mano Shangar- November 30, 2025

  கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ... Read More

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்

Mano Shangar- November 30, 2025

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார ... Read More

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீட்பு

Mano Shangar- November 30, 2025

புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளனர். ... Read More